இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்
மந்திரம்!
ஆசிரியர்உரை: உங்கள் தேவைகள் எதுவானாலும், கடவுளிடம் கேட்டுப்பெற முடியும் என்று தமிழ்முன்னோர் நிறுவியுள்ளனர். அந்த வகைக்கு, நீங்கள், உங்கள் மனதில் குவிக்க வேண்டிய மாண்பு ஆற்றல் குறித்த கலையே மந்திரம். இயற்கையின் அனைத்திலும், மறைந்து பொதிந்திருக்கும் நிலம், நீர், தீ, காற்று ஆகிய நான்கு ஆற்றல்களை குறிக்க நான்மறை என்கிற தலைப்பை உருவாக்கியிருந்தனர், தமிழ்முன்னோர். அந்த நான்மறைகளும், வெளியில் இயங்கி, வெளிக்கு ஒரு இயக்கம் கொடுத்து, வெளியை விண்வெளி ஆக்குவதும், விண்வெளி- நான்மறைகளிடம் பெற்ற இயக்கவகைக்கு, நான்மறைகளை முயக்கும்போது இயக்கமற்ற வெளியும் முயக்க ஆற்றல் பெற்ற விசும்பு ஆகிவிடுவதால், நான்மறைகளோடு- விசும்பு நிலை எய்திய வெளியும் ஒரு ஆற்றல் ஆகிறது. நிலம் நீர், தீ, காற்று, விசும்பு என்கிற ஐந்தையும் குறிக்க, ஐந்திரம் என்கிற பொருள் பொதிந்த தலைப்பை உருவாக்கினர் தமிழ்முன்னோர். ஆகவே, தமிழ்முன்னோர் கண்டறிந்து நிறுவிய முதன்மை திரங்கள் நிலம், நீர், தீ, காற்று, விசும்பு எனும் ஐந்து ஆகும். இந்த ஐந்திரங்களை விரிவாக ஆயும் மொழியான தமிழுக்கு, கால அடிப்படையில் மூன்று பெயர்கள் உண்டு. அவற்றுள், முதலாவது முகிழ்...
.png)
கருத்துகள்
கருத்துரையிடுக